வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, December 5, 2010

இன்று "பாரதி" இருந்தால்
 
தன் வண்ணக்கவிதைகளால் 
வசீகரித்திருப்பான் 
தன் எண்ணச் சிறகுகளில் 
ஏற்றி 
எழுச்சியை சொல்லியிருப்பான் 
வெளிச்சமான விடுதலைக்கு 
வித்தாக இருந்திருப்பான் 
சாமிகள் இல்லாத 
ஆன்மீகம் 
வளர்திருப்பான் !
உணவில்லா மனிதன் இல்லை !
என்ற நிலையை எட்ட  பாடியிருப்பான் ...
யாருக்கும் 
ஜதி பல்லக்கு தூக்காமல் 
சாற்றுகவி  தீட்டாமல் 
உலகமாக கவியாக உயர்ந்திருப்பான்!
கற்கண்டாய்...
கன்னல் சுவையாய்...
கனிஅமுதாய் திகழும்...
நற்தமிழ் அன்னை
நன்று சிரித்திருப்பாள்

No comments:

Post a Comment