கழுகுமலை ஸ்ரீகாந்த்
மரணித்து மீண்டும் மீண்டும் ஜனிப்பதால்
மரணத்தை மறந்து போகச் செய்தவனே.,
கருவறை இருட்டினில் விடியலின் வெள்ளியே.,
குத்தீட்டிக் குளிரில் வெம்மையாய் வருவாய்.
கிரணத்துக் கீற்றாய் பிரபஞ்சத்தில் படர்ந்து
கிடந்த ஜடங்களை உயிர்ப்பிக்க வைத்தவனே
நிரந்தர கர்பத்தில் தாய்மையின் வடிவே.,
குழவிக்கு மழலையாய் கொஞ்சியே வருவாய்.,
ஆற்று வெள்ளத்தை அணை கட்டி
ஆனந்த நெல்மணிகள் அருளிச் செய்தவனே
நிறைந்த வயிற்றில் உதித்த சிரிப்பே
தமிழன் உண்டிட முல்லையாய் வருவாய்.,
கற்கள் உரசி கடும்தீ மூட்டி
கற்கால வெளிச்சம் கனிவாய் தந்தவனே
அற்புத உலகின் அரும் படைப்பே
அணு உலையைப் காத்திட நீ வருவாய்.,
கேட்கும் கல்வி செல்வம் சேர்த்து
கேளா தீய குணங்கள் ஒழித்து
முன்னை வினைகள் முற்றம் அழித்து
முடிவிலி இன்பமாய் நீ வருவாய்.,,
வருக புத்தாண்டே வருக.,,,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment