தவறுதலாய் விட்டுச்சென்றான் பயணி தன கைபையை -அதை
தனதாக்கிக்கொள்ள நினைக்காது -ஆட்டோ ஓட்டுனர்
உண்மையை சொல்லி ஒப்படைத்தார் காவல்நிலையத்தில் !
நன்மையாய் அவர் பெற்றார் பரிசும் நற்சான்றிதழும்
நிரபராதி நன்மை பெற வேண்டும் என்பதற்க்காகத்தான்
சாட்சிக்கூண்டில் ஏறும் சகல மனிதர்களும் சொல்கின்றார்
"நன் சொல்வதெல்லாம் உண்மை ,உண்மைதவிர வேறில்லை !"
என்கிற சத்தியப்பிரமாணத்தை நீதிபதியின் முன்னிலையில் !
முயல் அன்று ஆமையிடம் தோற்றதென்னவோ உண்மைதான்
விளைவு ...?இன்றும் முயல் கூட்டமோ
பாய்ந்து பாய்ந்து செல்லும் சுறுசுறுப்பு நன்மையன்றோ !
பொட்டு வைத்துக்கொண்ட விரல் பொத்தானை அமுக்கியது உண்மைதான் !
நிறைவேறும் வாக்குறுதிகளை -விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பது நன்மைதான் !
அதிவேகமாய் ஓடிவந்து - பந்து வீசுவது -உண்மைதான் !
அதுவே 'நோ பால்' ஆகும் போது ஆட்டக்காரருக்கு அது நன்மைதான் !
கவிதை எழுதும்போது காகிதங்கள் கிழிபடுவது உண்மை !
கனியொத்த கவிதை உருவாகி இனித்திடுமே அது நன்மை !
மண்ணைக் கீறிக்கொண்டு விதை வெளிப்படுவது உண்மை !
விண்ணோக்கி அது விருட்ச்சமாய் வளர்வதுதான் நன்மை !
வீணையின் நரம்புகளில் விரல்களின் விளையாட்டு உண்மை !
விதம் விதமாய் அதில் நாதம் பிறக்கிறதே அது நன்மை !
மணவறையில் அமர்வதுவோ மறுக்கவொண்ணா உண்மை !
மனமொத்த தாம்பத்தியம் மறுக்கவொண்ண நன்மை !
ஓட்டையுடன் புல்லாங்குழல் உருவாவது உண்மை
பட்டை அது இசைக்கையிலே உணர்த்திடலாம் நன்மை !
வாசலிலே படிக்கின்ற கவிதையாவும் உண்மை
வாசமிகு நறுமலராய் மனம் வீசும் நன்மை !
நாக்கிற்கு போடப்பட்ட பொன்னாடையே உண்மை
நாக்கு உதிர்க்கின்ற நற்சொல்லே நன்மை !
அடைகாக்கும் தேனீக்கள் கூட்டமே உண்மை -கூடு
உடைபட்டால் வழிகின்ற தேனன்றோ நன்மை !
சொல்லுக்கு உண்மையே கிரீடம் சூட்டும்
எல்லாமே நன்மையை எளிதில் கூட்டும் !
No comments:
Post a Comment