வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Tuesday, July 5, 2011

கவிஞர்.வெ.அரங்கராசன்.

உண்மை தருமே நன்மை 



                 உண்மை தருமே நன்மை-அந்த
                 உண்மை உண்மை யாக இருந்தால்....
                 உண்மை பொய்ம்மைக் குப்பின் நின்றால்
                 உண்மை தருமா நன்மை?அது சிறுமை.....

                 உண்மை யிடத்தில் கண்மை
                          உண்மை யானால்
                 உண்மை தருமே நன்மை....
                          உண்டுஅங்கு நன்மை.....

                 ஒண்மை தண்மை திண்மை யாவும்
                 உண்மை யிடத்தில் உண்மை யானால்
                 உண்மை தருமே நன்மைஅது இனிமை....
                 உண்மை வெறுமை யானால்அது இன்மை.....
        
                 உண்மை அண்மைத் தன்மை கொண்டால்
                 உண்மை தருமே நன்மைஅது முதன்மை.....
                 உண்மை வெண்மைத் தன்மை கொண்டால்
                 உண்மை தரும்அந் நன்மைஅது புன்மை....
                
                 உண்மை தரும்பல நன்மை....அவை
                          கழுத்தில் கட்டிய தாலி....
                 பொய்ம்மை தரும்பல நன்மை....அவை
                          முட்டியில் கட்டிய தாலி......  

                 உண்மை உறங்கும் ஒருபோதும்
                          உயிரை உதிர்க்காது....
                 பொய்ம்மை பேயாட்டம் போடும்.....
                          ஒருநாள் ஓடும்...

                 உண்மை இமயம் நிரந்தரம்,,,,,
                 உண்மை பெருமை அருமை....
                 உண்மை உயர்வரம் உயிர்அறம்....
                 உண்மை தருநன்மை வலிமை.....
________________________________________________________________________

 கண்மை=கண்ணோட்டம், வண்மை=வளமை,
 ஒண்மை=அறிவு, தண்மை=நற்பண்பு,
 எண்மை=எளிமை, வெண்மை=அறிவின்மை, புன்மை=இழிவு.

No comments:

Post a Comment