வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Wednesday, January 5, 2011

கவிஞர் கவிமாமணி வாசல் எழிலன்- கவிதை

பருவ மழை தவறவில்லை ; பாடுபடும் நல்ல
       பாட்டாளி மக்களுக்கோ குறைவில்லை, நாளும்
வறுமையில்லை வெல்லுகின்ற ஆற்றலுக்கோ  இங்கே
       வாழுகின்ற நம்மிடமே குறைவில்லை.என்றும்
பெருமையினை கொண்டிருக்கும் நாடென்றே எங்கும்
       பீடுநடை  போடுவதில் குறைவில்லை.போற்றும்
 பொறுமையினால் பெற்றவராய் வாழ்ந்திருக்க இங்கே
        பூரிப்பே நிறைந்திருக்கும்  புத்தாண்டில் தானே!

விலைவாசி வானத்தை முட்டினாலும் சாதி
        வீட்ட்ருமைகள் எங்கெங்கு நிறைந்தாலும் நீண்ட
மலையோலே ஊதியங்கள் வருவதாலே நாமும்
        மகிழ்ச்சியிலே மக்களெல்லாம் இருக்கின்றார் நாடி
வலைவீசித் தேடுகிறார் நகைக்கடையை பல்லோர்
        வாழுகின்றார் ஆடம்பரத்தில் குறைவின்றி காயும்
நிலையில்லாம் நிறைவாக மாறியதால் மக்கள்
           நெஞ்சமெல்லாம் பூரிக்குதே புத்தாண்டில் ஒன்றாய்!

No comments:

Post a Comment