வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Friday, January 14, 2011

பூரிப்போம் புத்தாண்டில்

பூரிப்போம் புத்தாண்டில்

வரலாற்றை பதிவு செய்யும்
வண்ண நாயகியின் பிறந்த நாள்
ஆகையால்
உரக்க கூச்சலிடு
உன்னதமாய் பாட்டுப் பாடு
ஊர்முளுக்கப் பறை கொட்டு

தீயோர்க்கு தீயவை தந்து
எடுத்துவைத்த அடி எல்லாம்
ஏழ்மையை விரட்டுது என்று

விடிகின்ற புதுநாள் எமக்கோர்
விடுதலை தரும் என்றும்
உரக்க கூச்சலிடு !
இரவெல்லாம் விடியலுக்கே
இடரெல்லாம் மகிழ்ச்சிக்கே
எனச் சொல்லி
வந்தனைக்கும் காலச் சுவடு பதித்திடவே
உன்னத பாட்டுப் பாடு !!

போனது போகட்டும் இன்று
புதிதாய் நாம் பிறந்தோம் இனி
புதியதோர் விதி சமைப்போம் என
ஊர்முளுக்கப் பறை கொட்டு !!

வேதனைகள் புறந்தள்ளி
சாதனைகள் ஏற்றுக் கொள்வோம்
நாயகின் பிறந்தநாள்
போற்றுவோம் புத்தாண்டன்று

கவிஞர் கழுகுமலை இல. ஸ்ரீகாந்த்

No comments:

Post a Comment