புத்தாண்டு பிறபென்றால்புதிய எண்ணம்
புறப்பட்டுக் கால்கொள்ளும் பருவகாலம்
வித்தாகபப் புதையுண்ட விருட்ச நாற்று
வானோக்கி உ யர்கின்ற உறவுக்கோலம்
பத்தான விரலுக்குள் உழைப்பின் வேகம்
புதியஉரம் கொள்கின்ற அழைப்பின் தாகம்
சொத்தாக நல்லெண்ணம் ஒழுக்கம் வாய்மைச்
சுடரேந்தி இமயத்தை சுருட்டிப் போடும் !
வசந்தங்கள் பூபெய்த வேம்பு பூக்கும்
வாசல்கள் திறந்தெங்கும் நேசம் வீசும்
கசப்பெல்லாம் இனிப்பக்கிக் கவலை மாற்றும்
கட்டுண்ட பாசங்கள் வாசம் தேக்கும்
பசப்புக்கள் இல்லாத வாழ்க்கை யாலே
பன்னீர்ப்பூ சொரிகின்ற பாதைதோன்றும்
பசுமைக்கு வரவேற்புப் போர்வை சூட்டி
பூரிப்போம் புத்தாண்டில் ! புகழே மிஞ்சும் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment