வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Wednesday, January 5, 2011

-கவிமாமணி குமரி செழியன் கவிதை

புத்தாண்டு பிறபென்றால்புதிய எண்ணம்
       புறப்பட்டுக் கால்கொள்ளும் பருவகாலம்
வித்தாகபப் புதையுண்ட விருட்ச நாற்று
       வானோக்கி  உ யர்கின்ற உறவுக்கோலம்
பத்தான விரலுக்குள் உழைப்பின் வேகம்
        புதியஉரம் கொள்கின்ற அழைப்பின் தாகம்
சொத்தாக நல்லெண்ணம் ஒழுக்கம் வாய்மைச்
        சுடரேந்தி இமயத்தை சுருட்டிப் போடும் !

வசந்தங்கள் பூபெய்த வேம்பு பூக்கும்
       வாசல்கள் திறந்தெங்கும் நேசம் வீசும்
கசப்பெல்லாம் இனிப்பக்கிக் கவலை மாற்றும்
         கட்டுண்ட பாசங்கள் வாசம் தேக்கும்
பசப்புக்கள் இல்லாத வாழ்க்கை  யாலே
        பன்னீர்ப்பூ சொரிகின்ற பாதைதோன்றும்
பசுமைக்கு வரவேற்புப் போர்வை சூட்டி
        பூரிப்போம் புத்தாண்டில் ! புகழே மிஞ்சும் !


 

No comments:

Post a Comment