வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Tuesday, January 4, 2011

கவிமாமணி எதிரொலி விசுவநாதன்

  டிசம்பர் மாதம் பாரதி பிறந்தார் 
ஜனவரி மாதம் புத்தாண்டு 
பாரதி பிறந்த பின்னால் அன்றோ 
பைய வந்தது புத்தாண்டு 
கூண்டுப் பறவை விடுதலை யாகி 
கூவிவானில் பறப்பதுபோல் 
வீட்டு சிறைக்குள் கிடந்த பெண்கள் 
விடுதலை ஆனது யாராலே 
பாரதி பிறந்த பின்னால் அன்றோ 
பாவயருக்கு புத்தாண்டு 
பார்பனனாக பிறந்ததாலே 
பாரதிக்கில்லை புத்தாண்டு 
-எதிரொலி விசுவநாதன் 
044 - 22420451 

No comments:

Post a Comment