வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Wednesday, May 11, 2011

வாசல் வசந்தப்பிரியன் -தலைவர் வாசல் கவிதை அமைப்பு

                        
                    "  பூக்கட்டும் புதுமைப் பூக்கள் ! " 


புறப்படத் தயாராகும் பூக்களே ! - உங்கள் பயணம் 
மலர்மாலையில் தொடங்கவா ?- மலர்வளையத்தில் முடங்கவா ?

தினந்தோறும் தன்னிபோடும் செடிக் கணவனின் 
மனங்கொள்ளும் வகையில் இதழ்விரிக்கும் மனைவிப் பூ !

இதழ்மலரும் ரோஜாவே !- நீ ஒரு - இலங்கைப் பெண்ணா ?
உன்னைச் சுற்றிலும் உருவானதுதானே ' முள்வேலி ' !

கடவுளர் சிலைகள் ஆன்மிகத்தின் தனிஉடைமை 
சிலைமீது படர்தல் பூஜைப்பூக்களின் தனிஉரிமை !

பற்றைக் காட்டப் பலவழிகள் இருந்திடினும் 
ஒற்றை ரோஜா மலர்கொடுத்து உவந்திடுவர் காதலர்கள் !

மண்ணில் புதைகின்ற விதைகள் எழுச்சியில்தான்
செடியில் பூக்கின்ற பூவும் புரட்சியாகும் !

புல்லாங் குழலுக்குள் புகுந்துவரும் காற்றேதான் 
நல்லிசை தவழ்கின்ற சங்கீத ஊற்றேயாம் !

மட்டைகள் எல்லாம் செடிகளாய் மாறினால் 
பந்துப்பூக்கள் ஆறு -நான்கென பறந்தோடி மலரும் !

பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை குறிஞ்சிப்பூ மலரும் 
பதின்மூன்றுக்குப் பிறகுதான் இங்கே ஆட்சிப்பூ மலரும் !

குமணன் என்றால் கொடைக்கெல்லாம் மேனிலை 
' ரமணன் ' என்றால் தட்ப வெப்ப வானிலை !

இளமை இங்கு பூக்கலகப் பூக்கட்டும் 
இளைஞர் நன்கு நாடுதனைக் காக்கட்டும் ! 

பூச்சூடும் பூவையரும் அணி திரளட்டும் 
பூமிதனில் புத்துணர்வு நனி மிரளட்டும் !

இலக்கியப் பூ மணம்வீசும் சோலை ஆகட்டும் 
கவிதைமயில் அதில் அழகு நடனம் ஆடட்டும் !

வாசமலர்க் கவிதையெல்லாம் சிந்து பாடட்டும்
' வாசல் ' மேடை வந்துநின்று ஒன்று கூடட்டும் !

புறப்படும் வாய்வழியே புலமைப் பாக்கள் 
பூக்கட்டும் வாசலிலே புதுமைப்  பூக்கள் 

No comments:

Post a Comment