வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Friday, May 13, 2011

கவிஞர். இளசை கிருஷ்ணமூர்த்தி

                                                        பூக்கட்டும் புதுமை பூக்கள் 

என் கொல்லைப்புறத்து
தோட்டத்தில் 
பூக்கள் சிரித்தன .
 என் நிலம் 
பழுதில்லாது பலன்தந்தது .

நான் எந்தப் பூவையும் 
விலைக்கு வாங்குவதில்லை 
மற்றவர்களைப் போல 

என் பூந்தோட்டத்தை 
எட்டிப்பார்த்த 
பூவியாபாரி 
என் தோட்டத்தில் 
பார்த்தீனியம்  விதைகளை 
வீசி விட்டான்

இப்போது 
பூக்கள் மலர்வதில்லை 
களர் நிலத்தில் 
கட்டிடங்கள் .........
வியாபாரியின் பூக்கள் 
விற்பனை அமோகமானது .........

என் கல்லறையில் 
பூவைபதற்கும் 
கையேந்தவோ !

புதிய நிலங்களை
கண்டெடுப்போம்!
நம் தோட்டத்தை 
நோட்டம் விட 
முடியாதபடி 
காவல் செய்வோம் 

புதிய நிறங்களுடன் 
பூக்கட்டும் 
புதுமைப் பூக்கள்

No comments:

Post a Comment