வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Saturday, May 14, 2011

செல்வன் மிரிதுண் மணிகண்டபிரபு

                                                பூக்கட்டும் புதுமை பூக்கள் 


இமயமும் குமரியும் இணையட்டும் 
கங்கையும் காவிரியும் சேரட்டும் 
காற்றும் வானமும் சரித்திரம் படைக்கட்டும் !
ஆதவன் சிதறிக்கண்ட பூமிக்குள் பூகம்பம் 
ஆற்றாத துயராக புயல் மழையின்
தாண்டவம் இனி இல்லாது போகட்டும் !

வாட்டும் சோக வடுக்களெல்லாம் வாரதுபோகட்டும் !
வெட்டு வைக்கும் தீவிரவாதம் வேரோடு அழியட்டும் !
மெல்லக் கதிர்வீசி சூரியனும் உலா வர 
அளவோடு மழை பெய்து வளமோடு வாழட்டும் !

நேற்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும் விட்டு 
தென்றல் தவழ்ந்துவர இதயத் தோட்டத்தில் 
பூக்கட்டும் புதிய பூக்கள் மொட்டுக்கள்விரிய!

No comments:

Post a Comment