வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Wednesday, June 15, 2011

எழுதுகோல் எமது செங்கோல்

 நீதி காத்த மன்னர்களின் 
செங்கோல் 
பிரதி எடுக்கப்பட்டு 
நீதிமன்றத்தில் டவாலியிடமும்
கலெக்டரின் டபேதாரிடமும்
தரப்பட்டுள்ளது 
செங்கோல் 
சீருடையின் ஓர் அங்கம் 

நீதிமன்றங்களில் 
நீதிபதிகள் 
கருத்து கந்தசாமிகளாய் 
மாறிப்போனர்கள் !

செங்கோல் 
எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடும் 
ஜனநாயகத்தின் மன்னர்களுக்கு 
கைத்தடி!
உரிமைகேட்டுப் போராடுபவர்களை விரட்ட 
போலீஸ் கையில் கொடுக்கப்பட்ட 
லத்தி !
கட்டப்பஞ்சாயதுக்காரர்கள் கையில் 
உருட்டுக்கட்டை !
அரசியல் சட்டத்தின் ஒட்டைகளிலேயே 
நீதிபரிபாலனங்கள் 

மன்னர்களின் கஜான மந்திரிகள்ளலேயே 
கொள்ளையடிக்கப் படும் வினோதம் !

வாருங்கள் கவிஞ்கர்களே!   
எட்டயபுரத்தானின் எழுத்தின் ஈரத்தில் 
உங்கள் எழுதுகோலை நனையுங்கள்

ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் 
உளுதுப்போனத்தால் 
எழுதுகோல் தான்
இனி மற்றுத்தூண் !

கடைக்கோடி மனிதனின் 
கவலைகளை உங்கள் 
கருவில் ஏற்றுங்கள் .....

உங்கள் எழுதுகோல் 
ஒவ்வொரு முறை 
கவிழும்போதும் 
நிமிர்துநிற்கும் செங்கோலாய் !
புதியவிதிகளோடு விடியலுக்காய் !


-இளசை கிருஷ்ணமூர்த்தி 

No comments:

Post a Comment