கதிரொளி வந்தால் கலை விடியும் ,
காரிருள் குவிந்தால் கனமழை பொழியும்
தமிழுக்கு தடயம் திருக்குறள்
தமிழனின் தந்தை வள்ளுவன்
வான்புகழவள்ளுவம் வடித்து-தந்த
எழுதுகோல் எமது செங்கோல்
செஞ்சொல் கவிதைகள் ஏட்டிலே
விஞ்சும் புகழ் தமிழ் நாட்டிலே
பேச்சில் மூச்சில் கவிதையை
தவமாய் கொண்ட பாரதியின்
எழுதுகோல் எமது செங்கோல்
அன்பின் முகவரி கொண்டு
அடுக்கு மொழி பேசி தமிழை
புத்துணர்வு தந்த எங்கள்
அறிவின் முதல்வன் அண்ணா
எழுதிய கோல்எமது செங்கோல்
No comments:
Post a Comment