உராய்தளுக்கும் உயவுகளுக்கும்
உட்பட்டது உறவு.
முத்தப்பர் எனச் சொல்லி
முன்னவர்,
பின்னவர் சிறகுகள் ஒடிப்பின்
வெப்ப நாடிகள் முன்னவர்
வெளித் தோல்களைச்
வடுவாய் மாறிச் சுடும்.
நான்கு பேர் மத்தியில்
நாற்காலியில் அமரக் கூட
சுய சிறகுகள் இழந்து
சுருதியற்ற கூடுகள் போடும்
கோலங்கள் தேவையா?
விட்டொழிப்பாய் நண்பனே,
தமிழ்,
தலைவர்களை நம்பி
தலை கவிழ்ந்ததில்லை
வெட்ட வெட்ட முளைக்கும்
உனது சிறகுகள் – தமிழுக்காய்
அவை சட சடவென, பட படவென
அண்ட வெளிதனில் பறக்கட்டும்.
தோழனே,
நம் மொழி
மெல்ல மெல்லச்
செத்திடச் செத்திடச்
செய்வோர் முன்
சேவகம் புரிந்திடுமோ?
ஒராயிரம் ஆதவனில்
ஒன்றைப் பற்றிக் கொண்டோர்
அகண்ட வெளிதனில்
அகிலத்தினை வென்றதாய்
திளைத்திருந்தால் – அவர்தம்
விட்டத்துப் பூனையும்
எலியின்றிச் சாகும்
வெற்று நிலையும்
வெகு தூரத்தில் இல்லை
என உணர்வார்.
உறவின் சிறகுகள்
சுதந்திரம் தந்ததில்லை
வெட்டித் தொலைப்பாய்
அதை நீ.
இறகினும் மெலிதான தமிழ்
உன் சிறகினில் இணைத்து
அண்ட வெளிதனில்
ஆனந்தக் கூத்தாடுவாய்.
புறப்படு
உராய்தளுக்கும் உயவுகளுக்கும்
உனது உட்பட்டது உறவு.
உயவுகளின் தன்மை பெருக்கி
உராய்தல் களை ஒழித்திடுவாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment