வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Monday, August 15, 2011

வாசல் வசந்தப்பிரியன் கவிதை

சிறகுகளின் சுதந்திரம் பறிபோனதால்
உறவுகளை விட்டுப்பிரிந்து
தனிமையில் கூண்டுக்கிளி

மலருக்கு மல்ர் தாவும் வண்டுக்குக்கூட
உறவுக்குக் கைகொடுப்பது
சுதந்திரச் சிறகுகள்தானே

சிறகுகள் சுதந்திரமாய் விரிவதால்
தொலைதூர வான் பயணம்
உறவுகளின் சந்திப்பு வேடந்தாங்களில்

வேடன் குறி தப்பவில்லை
சிறகுகள் செயலிழப்பு
பறவி உயிர் பறந்தது சுதந்திரமாய்

முதியோர் இல்லத்தில் தாய் பறவை
சேர்த்துவிட்டுப் பறந்தது சேய்ப்பறவை
உறவின் பிரிவுக்கு சுதந்திரச் சிறகுகளா?

சிறகடித்துப்பறந்தது
சமாதான வெண்புறா
வான்வெளிச் சுதந்திரம்

சிறகுகளின் சேதாரம்
அக்கினியிலிருந்து விடுபடமுடியா
ஃபீனிக்ஸ் பறவை

சங்கமித்தன உறவுகள்
விரிந்தன சுதந்திரச் சிறகுகள்
பறவைகளாய் மணமக்கள்

ஓங்கிநின்றது சகோதர பாசம்
இடையில் வந்தது சொத்துப்பிரச்சனை
சிறகடித்துப் பிரிந்தன உறவுகள்

உறவுகள் அனைத்தும் பறவைகளே
ஒருநாள் விரிக்கும் அவை
சுதந்திரச் சிறகுகளே

No comments:

Post a Comment