வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Monday, August 15, 2011

கவிமாமணி வாசல் எழிலன்

                                                              உறவுகள் சுதந்திர சிறகுகள்                                               


சாதனையைச் செய்வதற்கும் உலக மெல்லாம் 
             சமத்துவமாய் ஆவதற்கும்  எழுந்து நிற்கும் 
வேதனைகள் இல்லாமல் போவ  தற்கும் 
             விடிவினையே எல்லோரும் உணர்வ தற்கும்          
நாதத்தை மீட்டிடவே முயறு கின்ற 
             நல்லோராய்  நாமெல்லாம்  ஆவதற்கும்
சீதனமாய் உறவுகளைப் பெருக்க வேண்டும்                         
              சிறகுகளாய்ச்    சுதந்திரமே  ஆதல் வேண்டும்  

புள்ளியினை வைத்துவிட்டால் கோலம் போடும் 
             புவியினிலே நாமெல்லாம் இருப்பதாலே 
வெல்லுகின்ற உள்ளத்தைக்  கூட்டு கின்ற 
             விடிவெள்ளி  போலிங்கே எழுவ தற்கும்                                            வல்லவரை  நாமெல்லாம்  ஆவ தற்கும்
              வழியினையே காட்டுவோராய் நிற்ப தற்கும்     
உள்ளங்கள் ஒன்றுபட்டு நிற்றல் வேண்டும்
               உறவுகளே சிறகாக  இருத்தல் வேண்டும்

சிந்தனைகள் செழிக்கின்ற சிறகி ருக்க 
               செந்தமிழாய் மனமெல்லாம்  சிறப்ப தற்கும்  
  பந்தமென எல்லோரும்  பழகு கின்ற
                 பக்குவமே எங்கெங்கும் இருப்ப தற்கும்
  விந்தையினைச்  செய்கின்ற சுதந்தி  ரத்தை
                 வியனுலகம் பெற்றிருக்க வேண்டு மய்யா !

 உறவுகளே  உள்ளத்தில் ஒளியாய் ஆக
          உண்மையினை எல்லோரும் உயர்வாய் ஆக்க
கரையில்லா நெஞ்சதனைக் காலமெல்லாம் 
         கலங்காமல் என்றென்றும் நிலைத்திருக்க 
நிறைவினையே பெற்றவராய் வாழ்திருக்க
         நேசத்தை எந்நாளும் நினைத்தி ருக்க
   உறவுகளே சிறகுகளாய் இருத்தல் வேண்டும்
           உறவெல்லாம் உயர்வினையே கொள்தல் வேண்டும்      

No comments:

Post a Comment