வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Saturday, August 13, 2011

இளசை கிருஷ்ணமூர்த்தி

உறவுகள் சுதந்திரச் சிறகுகள் 

தீவுகளாய் மாறிப்போன 
சமூகத்தில் 
தோப்பைப் பற்றிய கவலை 
அர்த்தமற்றது 

பரஸ்பர எதிர்பார்புகளுடனேயே 
உறவுகளின் 
ஊசலாட்டம் 

பழைய நியதிகளில் 
புதிய தலைமுறையை 
பயனிக்கச்சொல்ல
விலங்கிடப்பட்டதாய்
சுதந்திரத்தைபற்றிய
சிந்தனைகள் 

வேர்களைப்பற்றி 
அக்கறைகொள்ளாத விழுதுகள் 

விழுதுகளுக்கு நீர்தர மறுக்கும் 
வேர்கள் !

உறவு மரம் 
காட்சிப்பொருளாய்

மரங்களை ஓட்டுவதற்கு 
பெவிகால் இருக்க 
மனங்கள் தாமரை இலைமேல் 
நீர்போல 

மூன்று படுக்கையறை 
பளபளக்கும் தரை 
குளிர்சாதனவசதி
வென்நீருக்கும்,நன்நீருக்கும் 
கருவிகள் 
வடிவான மேசை நாற்காலிகள் 
அழகாய் இருந்தது வீடு 
உயிர்ப்பு இல்லாத காற்றோடு 
வெற்றிடமாய் ...
வளசைபோதலாய் 
வேறுநாடு சென்றவர்கள் 
அங்கேயே தங்கிவிட 
தாய்ப்பறவையின் தவிப்பு 

கலாச்சாரமாற்றத்தில் 
காணமல் போனது 
உறவுகளின் உன்னதம் 

No comments:

Post a Comment