வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Monday, August 15, 2011

கன்னிக்கோயில் இராஜா கவிதை

சுதந்திரக்கொடி ஏற்றப்படுவதற்குமுன்பே
சுரண்டப்பட்டுவிட்டது இந்தியப்பொருளாதாரம்
தீவிரவாதம்,மதவாதம் கூடிப்போராடின
நட்புக்களின் கூட்டணியில்

சுதந்திரச்சிறகுகளில் முடுக்கப்பட்ட
அடிமை விலங்குகள் அனைத்தும்
மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டன
பிறிதொரு நாளில்

தாத்தா காந்தி மாமா நேரு
போராட்டங்களுக்கு பின்னே
மிக நீண்ட வரிசையாய் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
சுதந்திரத் தியாகிகள் இன்று வரை

நம் உறவுகள் சுதந்திரச் சிறகுகளை
அறுத்தெந்த காலந்தொட்டு
இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
சாலை சீரமைப்பு முதல் சமச்சீர்கல்வி வரை

No comments:

Post a Comment