வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Saturday, August 13, 2011

கவிஞர் தி. கண்ணன்

சுதந்திரச் சிறகசைத்து 
சுழன்று ஆடுகின்றன 
இலைகள் 

தலைகீழாய்த் தொங்கி
ஊஞ்சலாடி மகிழ்கின்றன 
விழுதுகள் 

விசும்பின் வர்ணத்தைப்போல் 
வெளியெங்கும் 
தலையசைத்தாட்டி 
பசுமையால் 
கோடரிகளை வரவேற்று 
வீழ்கின்றன மரங்கள் 

கோபக் கோடரியில்
துன்பச் சூறாவளியில்
இன்னல் பேய்மழையில்
புவியெங்கும் வீழும்
மரங்கள்
மீண்டும் மீண்டும்
உயிர்தரித்து சிறகசைக்கின்றன
ஒவ்வொரு மரத்தினடியிலும்
உறங்காது காக்கும்
வேர்கள்!

துயரக் கழுகுகள் தீண்டாதபடி
உறவெனும்
சிறகுகளின் கூட்டுக்குள்
இலைகளும் விழுதுகளும்
கோழிக்குஞ்சுகளாய் !

No comments:

Post a Comment