வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, March 6, 2011

கவிஞர் கழுகுமலை இல ஸ்ரீகாந்த்- கவிதை

வாழும் வாழ்வே வரலாறு

நித்தம் நித்தம்
புத்தரின் காலடியில் பிட்சுகளுக்கு
இந்தியப் பிணங்களின் படையல்

அட்டைகள் கூட விட்டுவிடும்
அளவு அதிகமானால்
இந்த அரக்கர்கள் வெறி
அடங்குவதாயில்லை

உணவாக காத்திருந்த மீன்கள் கூட
உயிர் விடும் தமிழன் பார்த்து
செலுத்து கிறது கண்ணீர் அஞ்சலி

மறைந்து போன இனங்களுக்கு
நிதம் மடியும் இனங்களின்
மனித உரிமைகள் காக்க தவறும்
திராணியற்ற அரசுகள் உள்ளவரை
அனுதினம் வாழ்வே சாவாகிபோகும்

புத்தனே மௌனம் கலைந்து
புத்திமதி சொன்னால்
அவன் வாய் அடைக்க
மனிதக் கறி வைக்கும்
மிருகங்களுக்கு எதிராய்
வாழ்வுரிமைக்காய் போராடும்
எம் தமிழர்., வாழும் வாழ்வே வரலாறு

No comments:

Post a Comment