ஓடி ஒளிந்து
ஞானம் பெற்று
போதனை புரியும்
துறவியைக் காட்டிலும்
ஒரே குடிசையில்
மனைவியை மகிழ்வித்து
பெற்றொரையும் பிள்ளையும்
பேணி காக்கும்
இல்லரத்தானின் வாழ்வே
‘வாழும் வரலாறு’
இங்கு முடிந்தவன் சாதிகிறான்
முடியாதவன் போதிக்கிறான்
ஈரைந்து ஆண்டுகளுக்கு மேல்
திங்களின் முதல் ஞாயிறை
கவி-ஞாயிறாக்கிய
வாசலின் வாழ்வே
வசந்த்தின் வரலாறு
No comments:
Post a Comment