வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, March 13, 2011

கவிஞர்.இர.கணேஷ் கவிதை


ஓடி ஒளிந்து
ஞானம் பெற்று
போதனை புரியும்
துறவியைக் காட்டிலும்

ஒரே குடிசையில்
மனைவியை மகிழ்வித்து
பெற்றொரையும் பிள்ளையும்
பேணி காக்கும்
இல்லரத்தானின் வாழ்வே
வாழும் வரலாறு’

இங்கு முடிந்தவன் சாதிகிறான்
முடியாதவன் போதிக்கிறான்

ஈரைந்து ஆண்டுகளுக்கு மேல்
திங்களின் முதல் ஞாயிறை
கவி-ஞாயிறாக்கிய
வாசலின் வாழ்வே
வசந்த்தின் வரலாறு

No comments:

Post a Comment