வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Wednesday, March 16, 2011

வாசல் எழிலன்


வாழும் வாழ்வே வரலாறு 

மண்ணுக்குள் ளிருந்துவந்த போதும் மக்கள் 
   மகிழுதற்கே மின்னுகின்ற பசும்போன் னைபோல்
விண்ணுக்குள் குடியிருந்தும் அழகை காட்டி 
    வேதனையை ஒழிகின்ற வெண்ணி லாப்போல 
பண்ணுகுள் இருந்தாலும் பாட்டாய் ஆகிப்
    பசிமற்க்கச் செய்கின்ற இசையி னைப்போல்
தன்னலத்தை மறந்தவராய்ப் பிறர்க்கே வாழும் 
    தலைவர்வாழ் வேவரலா ராகு மன்றோ !

 இனமோங்கும் எண்ணத்தில் இருத்த வாரே
    இன்னலென வந்தபோதும் எழுச்சி காட்டும்
மனத்தினையேகொண்டோரும் பிறரே வாழ
    மனம்கொண்டே துணையாகி வலு வோரும் 
குணத்தினிலே கொள்கையினை மாற்றா தாராய்
     குன்றனவே உறுதியிலே நிற்கின் றோரும்
பணத்தினையே கருதாமல் பழகு வோரும்
     பல்லாண்டு வரலாறாய் ஆவர் அன்றோ !

No comments:

Post a Comment