வாழும் வாழ்வே வரலாறு
மண்ணுக்குள் ளிருந்துவந்த போதும் மக்கள்
மகிழுதற்கே மின்னுகின்ற பசும்போன் னைபோல்
விண்ணுக்குள் குடியிருந்தும் அழகை காட்டி
வேதனையை ஒழிகின்ற வெண்ணி லாப்போல
பண்ணுகுள் இருந்தாலும் பாட்டாய் ஆகிப்
பசிமற்க்கச் செய்கின்ற இசையி னைப்போல்
தன்னலத்தை மறந்தவராய்ப் பிறர்க்கே வாழும்
தலைவர்வாழ் வேவரலா ராகு மன்றோ !
இனமோங்கும் எண்ணத்தில் இருத்த வாரே
இன்னலென வந்தபோதும் எழுச்சி காட்டும்
மனத்தினையேகொண்டோரும் பிறரே வாழ
மனம்கொண்டே துணையாகி வலு வோரும்
குணத்தினிலே கொள்கையினை மாற்றா தாராய்
குன்றனவே உறுதியிலே நிற்கின் றோரும்
பணத்தினையே கருதாமல் பழகு வோரும்
பல்லாண்டு வரலாறாய் ஆவர் அன்றோ !
No comments:
Post a Comment