#கேள்வி கேட்க்கக் கற்றுத்தந்தவன் ...
சாக்ரடீஸ்
விஷக்குப்பியின் முத்தத்தில்
சரித்திரம் அவனை அச்சடிதுக்கொண்டது !
# மஞ்சள் மணம் மாறாத மனைவியுடன்
மஞ்சனை சேராமல்
மரணத்தின் கயிற்றை மகிழ்ச்சியுடன்
அணிந்துகொண்ட
பகத்சிங்கை
தன பக்கங்களில் சித்திரமாய் பதித்துக்கொண்டது
வரலாறு
#வறுமையின் கொடுமையிலும் வடித்த கண்ணீரெல்லாம்
அடிமைத்தளை நீக்க ...
அக்கிணிக்கவிதைகளை
அண்ணைத் தமிழில்
ஈன்றெடுத்த பாரதியை
வரலாறு
அணைத்துக்கொண்டது அகம் மகிழ !
# அங்கும் இங்குமாய் புகைந்துகொண்டிருந்த
சுதந்திரத் தீயை
அகிம்சை நெய்யால் வேள்வியாய் வளர்த்த
மகாத்மா
உலக வரலாற்றின்
உன்னதம் !
# கதாநாயகர்கள் மட்டுமல்ல
சில
வில்லன்களும் ...
ஹிட்லர்
முசோலினி
ரூசோ
என்று தொடங்கி
ராஜபக்சே வரை ...
வரலாற்றின் பக்கங்களில்
@ எதற்க்காகவேணும் உங்களை
அர்பணித்துக் கொள்ளுங்கள்
வரலாறு உங்களை
வளைத்துக் கொள்ளும் ...
# வரலாற்றில் என் பெயரையும்
பதிவு செய்ய வேண்டும் !
அதற்கு முன்
வாக்காளர் பட்டியலில்
என் பெயரைப்
பதிய வேண்டும் ...
No comments:
Post a Comment