வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Wednesday, March 16, 2011

இளசை கிருஷ்ணமூர்த்தி

#கேள்வி கேட்க்கக் கற்றுத்தந்தவன் ...
  சாக்ரடீஸ் 
  விஷக்குப்பியின் முத்தத்தில் 
  சரித்திரம் அவனை அச்சடிதுக்கொண்டது !

# மஞ்சள் மணம் மாறாத மனைவியுடன் 
   மஞ்சனை சேராமல் 
  மரணத்தின் கயிற்றை மகிழ்ச்சியுடன் 
  அணிந்துகொண்ட 
  பகத்சிங்கை 
  தன பக்கங்களில் சித்திரமாய் பதித்துக்கொண்டது 
  வரலாறு 

#வறுமையின் கொடுமையிலும் வடித்த கண்ணீரெல்லாம் 
  அடிமைத்தளை நீக்க ...
  அக்கிணிக்கவிதைகளை 
  அண்ணைத் தமிழில் 
  ஈன்றெடுத்த பாரதியை 
 வரலாறு 
 அணைத்துக்கொண்டது அகம் மகிழ !

# அங்கும் இங்குமாய் புகைந்துகொண்டிருந்த 
  சுதந்திரத் தீயை
  அகிம்சை நெய்யால் வேள்வியாய் வளர்த்த 
  மகாத்மா 
  உலக வரலாற்றின் 
  உன்னதம் !

# கதாநாயகர்கள் மட்டுமல்ல 
  சில 
  வில்லன்களும் ...
  ஹிட்லர் 
  முசோலினி 
  ரூசோ
  என்று தொடங்கி 
  ராஜபக்சே வரை ...
  வரலாற்றின் பக்கங்களில் 
@ எதற்க்காகவேணும் உங்களை 
    அர்பணித்துக் கொள்ளுங்கள் 
    வரலாறு உங்களை 
    வளைத்துக் கொள்ளும் ...
#  வரலாற்றில் என் பெயரையும் 
    பதிவு செய்ய வேண்டும் !
    அதற்கு முன் 
    வாக்காளர் பட்டியலில் 
    என் பெயரைப் 
    பதிய வேண்டும் ...


No comments:

Post a Comment