வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, February 6, 2011

கவிஞர் பாலசீனிவாசன் வாசித்தளித்த கவிதை

திண்ணியம் எய்துவர்


எய்தலாம் தான் எவையும் என்றும்
எவரும் திண்மை திண்ணப் பெற்றால்
கொய்ய இயலா உயரம் ஒன்றில்லை
குறையொன் றின்றேல் குறை வொன்றில்லை


மாய்ந்து மாய்த்த பெருமை கைவரும்
ஆய்ந்து தோய்ந்த அழுந்து மனவளத்தால்
இடர்பட கெடுத்த தடைஇடை மடுத்தலும்
எதிர்த்தலும் விழுதலும் தவிர்த்தலை ஒழித்திடும்


கொஞ்சம் கொஞ்சமாய் ஏற்ற முகம்தான்
மிஞ்சும் ஏனைய மிஞ்சலும் வேண்டும்
பதியப் பதிந்தவை பாதை நெறிபட
விதிகளை உருக்கிட விடியலை வகுக்கலாம்


எண்ணியாங் என்பது அளவையின் நீட்சி
எண்ணம் என்பது ஆழ்தலின் தோய்வு
திண்மை என்பது செறிந்ததன் தேர்வு
திண்ணம் உண்மை கைவரும் எவையும்

No comments:

Post a Comment