வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, February 13, 2011

வெ. அரங்க ராசன் கவிதை


துட்டு வந்து ஓட்டும் போது 
கிட்டவந்து ஓட்டுவார் - தங்கத் 
தட்டு என்றும் பட்டு என்றும் ..
மெட்டு கட்டிப் பாடுவார்

துட்டு எல்லாம் கெட்டுப்  போனால் 
எட்டி உடைப்பார்:திட்டி முடிப்பார்......
திட்டி விதமாகப் பேசி - நெஞ்சைச் 
சுட்டு விடுவார்; குட்டி விடுவார்...

கட்டுக் கட்டாயத் தொகையிருந்தால் காலைத்
தொட்டுக் கண்ணில் ஒற்றித் தொழுதிடுவார்..
பெட்டித் துட்டு விட்டுப் போனால் 
இட்டுக் கட்டி வெட்டி விடுவார்....

பட்டுப் போனால் கொட்டிவிடுவார்
பட்டி  என்றும் வெட்டி என்றும் 
மட்டமாகப் பேசி - நம்மைத் 
தட்டி விட்டு எட்ட ஓடுவார்

முட்டி நிற்கும் துன்பக்கட்டை 
எட்டி உதஈத்து ஒட்டவே -நமக்குள்ளே
ஒட்டியுள்ள நெஞ்சமன்றி
விட்டால் வேறு துணையும் யாரோ? 
  

வெ. அரங்க ராசன் கவிதை 

No comments:

Post a Comment