வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, February 6, 2011

கவிமாமணி எதிரொலி விஸ்வநாதன் 

தோன்றிய நாள் தொட்டுத் துவளாமல் வாடாமல்
சான்றாக நிற்கின்ற சங்கநூல் -வான்புகழும்
அய்யன் வள்ளுவன் அளித்த ஆரமுதே
பொய்யில்லா பூவுலக நூல்

சீர்கெடப் பேசும் திரையுலகப் பாடலை
ஊர்கெட ஓதும் முறைவிட்டுப் -பேர்பெற்ற
கட்டுப் பதினெட்டுக் கீழ்கணக்கில் உள்ளதேன்
சொட்டும் குறட்பாவைச் சொல்

உப்புச் சப்பின்றி உன்னதமாய் நீதிகளை
செப்பும் சில நூல்கள் ! தீதற்ட முப்பலோ
மங்காத தங்கம் ! மறவாமல் போற்றி அதை
எங்கும் குரலைக் கொடு .

No comments:

Post a Comment