வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Monday, February 7, 2011

செல்வன் மிருதுன் மணிகண்ட பிரபு

குறள் எடு குரல் கொடு

அறிவை பெற்றிட குறளை படித்திடு
    அழிக்க   முடியா செல்வமிது
அடிகள் அனைத்தும் வெற்றிப்படிகள் தமிழன்
      மடியில் விழுந்த முக்கனிகள்
நிலையாய் அறிவை பெருக்கிட நாளும்
       குறளை நீயும் படித்திடு
மலையாய் புகழை ஆக்கிவிடும் வாழ்வு 
        மலரும், இன்பம் பெருகிவிடும்
குறளை அறிந்து வாழ்ந்தால் உலகில்
        குறைகள் ஏதும் நமக்கில்லை !
வள்ளுவன் வழியில் நடப்போம் ,கொண்ட
       கொள்கை தனிலே சிறப்போம் .

No comments:

Post a Comment