வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Saturday, December 25, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்


பத்தோடு பதினொன்றாய் போகாமல்

வித்தாக விடியட்டும்  புத்தாண்டு !
முத்தான முயற்சியெல்லாம் வெற்றிபெற 
புத்துணர்வு தரட்டும் இப்புத்தாண்டு  !



  வாசல் வசந்தப்ரியனின் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Friday, December 24, 2010


ela.srikanth honoured by "Bangalure tamil sangam"

Friday, December 17, 2010

ஜனவரி 2  ஞாயிறு காலை 9 .30  மணிக்கு 
புத்தாண்டு  கவியரங்கம்  

Sunday, December 5, 2010

இன்று "பாரதி" இருந்தால்
 
தன் வண்ணக்கவிதைகளால் 
வசீகரித்திருப்பான் 
தன் எண்ணச் சிறகுகளில் 
ஏற்றி 
எழுச்சியை சொல்லியிருப்பான் 
வெளிச்சமான விடுதலைக்கு 
வித்தாக இருந்திருப்பான் 
சாமிகள் இல்லாத 
ஆன்மீகம் 
வளர்திருப்பான் !
உணவில்லா மனிதன் இல்லை !
என்ற நிலையை எட்ட  பாடியிருப்பான் ...
யாருக்கும் 
ஜதி பல்லக்கு தூக்காமல் 
சாற்றுகவி  தீட்டாமல் 
உலகமாக கவியாக உயர்ந்திருப்பான்!
கற்கண்டாய்...
கன்னல் சுவையாய்...
கனிஅமுதாய் திகழும்...
நற்தமிழ் அன்னை
நன்று சிரித்திருப்பாள்

Friday, December 3, 2010

டிசம்பர் 5  காலை 9 .30 மணி
வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் மூவரசம்பட்டு
தலைப்பு "இன்று "பாரதி" இருந்தால்
அனைவரும் வருக! 

Tuesday, November 23, 2010

வாசலுக்கு வருக

 "
கவிதைகளின் வசந்த வாசல்
வசந்தப்ப்ரியனின் இதய வாசல்
வசந்தாவின் புன்னகை வாசல்
கவிஞர்களின் கற்பனைக்கு
கைவிரிக்கும் அரண்மனை வாசல்