Friday, July 22, 2011
Saturday, July 16, 2011
கவிஞர் வாசல் வசந்தப்பிரியன்
தவறுதலாய் விட்டுச்சென்றான் பயணி தன கைபையை -அதை
தனதாக்கிக்கொள்ள நினைக்காது -ஆட்டோ ஓட்டுனர்
உண்மையை சொல்லி ஒப்படைத்தார் காவல்நிலையத்தில் !
நன்மையாய் அவர் பெற்றார் பரிசும் நற்சான்றிதழும்
நிரபராதி நன்மை பெற வேண்டும் என்பதற்க்காகத்தான்
சாட்சிக்கூண்டில் ஏறும் சகல மனிதர்களும் சொல்கின்றார்
"நன் சொல்வதெல்லாம் உண்மை ,உண்மைதவிர வேறில்லை !"
என்கிற சத்தியப்பிரமாணத்தை நீதிபதியின் முன்னிலையில் !
முயல் அன்று ஆமையிடம் தோற்றதென்னவோ உண்மைதான்
விளைவு ...?இன்றும் முயல் கூட்டமோ
பாய்ந்து பாய்ந்து செல்லும் சுறுசுறுப்பு நன்மையன்றோ !
பொட்டு வைத்துக்கொண்ட விரல் பொத்தானை அமுக்கியது உண்மைதான் !
நிறைவேறும் வாக்குறுதிகளை -விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பது நன்மைதான் !
அதிவேகமாய் ஓடிவந்து - பந்து வீசுவது -உண்மைதான் !
அதுவே 'நோ பால்' ஆகும் போது ஆட்டக்காரருக்கு அது நன்மைதான் !
கவிதை எழுதும்போது காகிதங்கள் கிழிபடுவது உண்மை !
கனியொத்த கவிதை உருவாகி இனித்திடுமே அது நன்மை !
மண்ணைக் கீறிக்கொண்டு விதை வெளிப்படுவது உண்மை !
விண்ணோக்கி அது விருட்ச்சமாய் வளர்வதுதான் நன்மை !
வீணையின் நரம்புகளில் விரல்களின் விளையாட்டு உண்மை !
விதம் விதமாய் அதில் நாதம் பிறக்கிறதே அது நன்மை !
மணவறையில் அமர்வதுவோ மறுக்கவொண்ணா உண்மை !
மனமொத்த தாம்பத்தியம் மறுக்கவொண்ண நன்மை !
ஓட்டையுடன் புல்லாங்குழல் உருவாவது உண்மை
பட்டை அது இசைக்கையிலே உணர்த்திடலாம் நன்மை !
வாசலிலே படிக்கின்ற கவிதையாவும் உண்மை
வாசமிகு நறுமலராய் மனம் வீசும் நன்மை !
நாக்கிற்கு போடப்பட்ட பொன்னாடையே உண்மை
நாக்கு உதிர்க்கின்ற நற்சொல்லே நன்மை !
அடைகாக்கும் தேனீக்கள் கூட்டமே உண்மை -கூடு
உடைபட்டால் வழிகின்ற தேனன்றோ நன்மை !
சொல்லுக்கு உண்மையே கிரீடம் சூட்டும்
எல்லாமே நன்மையை எளிதில் கூட்டும் !
Tuesday, July 5, 2011
கவிஞர்.வெ.அரங்கராசன்.
உண்மை தருமே நன்மை
உண்மை தருமே நன்மை-அந்த
உண்மை உண்மை யாக இருந்தால்....
உண்மை பொய்ம்மைக் குப்பின் நின்றால்
உண்மை தருமா நன்மை?அது சிறுமை.....
உண்மை யிடத்தில் கண்மை
உண்மை யானால்
உண்மை தருமே நன்மை....
உண்டுஅங்கு நன்மை.....
ஒண்மை தண்மை திண்மை யாவும்
உண்மை யிடத்தில் உண்மை யானால்
உண்மை தருமே நன்மைஅது இனிமை....
உண்மை வெறுமை யானால்அது இன்மை.....
உண்மை அண்மைத் தன்மை கொண்டால்
உண்மை தருமே நன்மைஅது முதன்மை.....
உண்மை வெண்மைத் தன்மை கொண்டால்
உண்மை தரும்அந் நன்மைஅது புன்மை....
உண்மை தரும்பல நன்மை....அவை
கழுத்தில் கட்டிய தாலி....
பொய்ம்மை தரும்பல நன்மை....அவை
முட்டியில் கட்டிய தாலி......
உண்மை உறங்கும் ஒருபோதும்
உயிரை உதிர்க்காது....
பொய்ம்மை பேயாட்டம் போடும்.....
ஒருநாள் ஓடும்...
உண்மை இமயம் நிரந்தரம்,,,,,
உண்மை பெருமை அருமை....
உண்மை உயர்வரம் உயிர்அறம்....
உண்மை தருநன்மை வலிமை.....
________________________________________________________________________
கண்மை=கண்ணோட்டம், வண்மை=வளமை,
ஒண்மை=அறிவு, தண்மை=நற்பண்பு,
எண்மை=எளிமை, வெண்மை=அறிவின்மை, புன்மை=இழிவு.Sunday, July 3, 2011
கவிஞர் கழுகுமலை இல. ஸ்ரீகாந்த்
உண்மை தருமே நன்மை
பூட்டிய அறைக்குள்
சத்தியத்தின் வியாக்கியாணங்கள்
உரக்கச் சொல்லியும் ஒருவருக்கும்
உரைக்கவில்லை
அதிகாரம் பத்தும்
இன்று பத்தோடு பதினொன்று
சீலர்கள் பேச்செல்லாம் இங்கே
சில்லறைக் காசாகிப் போனது.
ஊழல் உன்மத்தர்கள் ஒன்று கூடி
ஊழலுக்கு எதிராய் மசோதா செய்தால்
பாதுகாப்பாய் வாழும்- ஊழல்
அப்போது
அங்கிகரிக்கப்பட்ட ஊழல்- நம்
அத்தியாவசிய வாழ்வா தாரமாகிப்போகும்
குரல் கொடுப்போர் எல்லோரும்
அங்கிகரிக்கப்படுவதில்லை
நீதி மன்றங்களில் மாறி மாறி
வாசிக்கப்படும் தீர்ப்புகலெல்லாம்
நியாயம் என்று எவன் சொன்னவன்?.
நாற்பது ஆண்டுகள் கழித்து
நல்லதைச் சொல்ல நமக்கெதற்குச் சட்டம்.
நாலு வயதில் ராமன் கூனிக்கு செய்த ஊரு.
பதிநாலு வயதில் அவன்
கானகம் செல்ல கொடும் பாவி
கூனிக்குத் தண்டனை எந்த வயதில்
சரித்திரத்தில் இல்லவே இல்லை
அறைக்கச்சை அண்ணலும்
உண்மையை
உயிராகக் கொண்டார்
உயர்ந்தார்.
ஆனால்
நாம் உண்மையை
ஊறுகா யாகக் கூட தொடாமல்
அதன் நன்மையைப் பற்றி பேச
அருகதை நமக்கில்லை.
முதலில் தைரியமாய்
உங்கள் வருமானத்தை
குடும்ப அட்டையில் போடுங்கள்
பிறகு ஊர் நியாயம் பேசலாம்.
பூட்டிய அறைக்குள்
சத்தியத்தின் வியாக்கியாணங்கள்
உரக்கச் சொல்லியும் ஒருவருக்கும்
உரைக்கவில்லை
அதிகாரம் பத்தும்
இன்று பத்தோடு பதினொன்று
சீலர்கள் பேச்செல்லாம் இங்கே
சில்லறைக் காசாகிப் போனது.
ஊழல் உன்மத்தர்கள் ஒன்று கூடி
ஊழலுக்கு எதிராய் மசோதா செய்தால்
பாதுகாப்பாய் வாழும்- ஊழல்
அப்போது
அங்கிகரிக்கப்பட்ட ஊழல்- நம்
அத்தியாவசிய வாழ்வா தாரமாகிப்போகும்
குரல் கொடுப்போர் எல்லோரும்
அங்கிகரிக்கப்படுவதில்லை
நீதி மன்றங்களில் மாறி மாறி
வாசிக்கப்படும் தீர்ப்புகலெல்லாம்
நியாயம் என்று எவன் சொன்னவன்?.
நாற்பது ஆண்டுகள் கழித்து
நல்லதைச் சொல்ல நமக்கெதற்குச் சட்டம்.
நாலு வயதில் ராமன் கூனிக்கு செய்த ஊரு.
பதிநாலு வயதில் அவன்
கானகம் செல்ல கொடும் பாவி
கூனிக்குத் தண்டனை எந்த வயதில்
சரித்திரத்தில் இல்லவே இல்லை
அறைக்கச்சை அண்ணலும்
உண்மையை
உயிராகக் கொண்டார்
உயர்ந்தார்.
ஆனால்
நாம் உண்மையை
ஊறுகா யாகக் கூட தொடாமல்
அதன் நன்மையைப் பற்றி பேச
அருகதை நமக்கில்லை.
முதலில் தைரியமாய்
உங்கள் வருமானத்தை
குடும்ப அட்டையில் போடுங்கள்
பிறகு ஊர் நியாயம் பேசலாம்.
Subscribe to:
Posts (Atom)