வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Wednesday, November 9, 2011

இளசை கிருஷ்ணமூர்த்தி

மனம் கவர் மழலைகள் 

மழலைகள் ....
பாவத்தின் சம்பளமாய் 
வந்த 
பரிசுத்தம் !

செவி இனிக்கும் 
கன்னல் மொழி !
சிந்தை செப்பனிடும் 
வண்ணவிழி ...

சலனமற்ற 
மனம் ...........
ஆசைகளற்ற 
இதயம் !

மழலைகள் .....
முகமூடிகள் எதுவுமின்றி 
நிர்வாணத்தை 
அடையாய்ப்
போர்த்திக்கொண்டவர்கள் ....

சாதிப்பேய் 
சமயப்பித்து 
நிறபேதம் 
பணப்பைத்தியம் 
என்று 
எந்த அழுக்கும் 
படியாத 
சூரிய பிம்பங்கள் 
மழலைகள் ....

மாலையாய்க் கோர்க்கவேண்டிய
மலர்களை
மலர்வளையத்தில்
வைத்துத் 
தைப்பார்களா?

கண்திறக்கும் முன்னே 
கதைமுடித்தார்களே !
கொல்க்கொத்தாவில்.....

விதியா   அது 
விதிமீறல் செய்த 
சதி 

களங்கமில்லா நிலவுகள் 
கருவறைகோயில் வாழ்ந்த 
தெய்வங்களுக்கு 
கல்லறை தோட்டத்திலா
தொட்டில் கட்டுவது?

புதுயுகத்தின் பிரதிநிதிகளைப் 
பேணிக்காப்போம்

மழலைகள் 
மரணிக்காமல் 
வழிவகை செய்வோம் !