Saturday, November 19, 2011
Friday, November 11, 2011
Wednesday, November 9, 2011
இளசை கிருஷ்ணமூர்த்தி
மனம் கவர் மழலைகள்
மழலைகள் ....
பாவத்தின் சம்பளமாய்
வந்த
பரிசுத்தம் !
செவி இனிக்கும்
கன்னல் மொழி !
சிந்தை செப்பனிடும்
வண்ணவிழி ...
சலனமற்ற
மனம் ...........
ஆசைகளற்ற
இதயம் !
மழலைகள் .....
முகமூடிகள் எதுவுமின்றி
நிர்வாணத்தை
அடையாய்ப்
போர்த்திக்கொண்டவர்கள் ....
சாதிப்பேய்
சமயப்பித்து
நிறபேதம்
பணப்பைத்தியம்
என்று
எந்த அழுக்கும்
படியாத
சூரிய பிம்பங்கள்
மழலைகள் ....
மாலையாய்க் கோர்க்கவேண்டிய
மலர்களை
மலர்வளையத்தில்
வைத்துத்
தைப்பார்களா?
கண்திறக்கும் முன்னே
கதைமுடித்தார்களே !
கொல்க்கொத்தாவில்.....
விதியா அது
விதிமீறல் செய்த
சதி
களங்கமில்லா நிலவுகள்
கருவறைகோயில் வாழ்ந்த
தெய்வங்களுக்கு
கல்லறை தோட்டத்திலா
தொட்டில் கட்டுவது?
புதுயுகத்தின் பிரதிநிதிகளைப்
பேணிக்காப்போம்
மழலைகள்
மரணிக்காமல்
வழிவகை செய்வோம் !
Subscribe to:
Posts (Atom)