வாசல் கவிதை அமைப்பின் தலைவரும் கவிஞருமான கவிமாமணீ வாசல் வசந்தப்பிரியன் கடந்த ஐந்தாம் திகதி அன்று அகால மரணமடைந்தார் என்பதை அறிந்து வாசல் அன்பர்கள் அனைவரும் சொல்லொனாத் துயரடைந்தனர். அன்னாரது நினைவைப்போற்றூம் விதமாக அவரது திருவுருவத் திரைப்படம் திறப்பு கடந்த ஞாயிறு 20 -01-2013 அன்று வணிகர் சங்க திருமணமண்டபத்தில் நடைபெற்றது. கவிஞர்களும், தமிழ் நெஞ்சங்களும் கலந்துகொண்டு கவிதை பாடியும் நினைவுகூர்ந்தும் வாசல் வசந்தப்பிரியன் அவர்களுக்குக் கவியஞ்சலி செலுத்தினர். திருவள்ளுவர் இலக்கியமன்றத்தின் தலைவர் கோ.பார்த்தசாரதி அவர்கள் வாசல் வசந்தப்பிரியனின் திருவுருவப்படத்தைத் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாரதி கலைக்கழகத்தின் தலைவர், பாரதி சுராஞ் அவர்கள் வாசல் கவிதை அமைப்பு பற்றியும் வசந்தப்பிரியன் பற்றியுமான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment